தாராபுரம், ஜூலை 31- தாராபுரத்தில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி குற்றங் களை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தாராபுரம் நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தலைமை யாசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக் கப்பட்டது. மறுநாள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நூதன முறையில் கொள்ளையடிக்கப் பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வலியு றுத்தி சார் ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளிக்கப் பட்டது. அம்மனுவில், தாராபுரம் நகரில் தினசரி திருட்டு, வழிப்பறி மற்றும் வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் திருட்டுகள் குறித்து புகார் அளித்தால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.